‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்
காஷ்மீரில் இந்து பண்டிட்டுகள் மட்டுமே- அதுவும் முஸ்லிம்களால்- பாதிக்கப்பட்டதாக ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சித்தரித்தது. ஆனால், 32 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டுமின்றி அனைவருமே மோசமான சூழலை எதிர்கொண்டனர். அந்த நாட்களில் காஷ்மீர் சீக்கியர்களும் முஸ்லிம்களும்கூட கொல்லப்பட்டனர். 90-களில் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே கொடூரமாக கொலை செய்யப்பட்டது போல் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ காட்டுகிறது; கடந்த 1989-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் முகமது யூசுப் ஹல்வாய் கொல்லப்பட்டார். இதுதான் அங்கு நடைபெற்ற முதல் அரசியல் கொலை. அவர் முஸ்லிம்தானே தவிர இந்து அல்ல. அதற்கு முன்பு காவல்துறை ஐஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் ஐஜியின் பாதுகாவலர் உயிரிழந்தார்.
பண்டிட்டுகள் இந்துக்கள் என்பதாலேயே அவர்கள் குறிவைக்கப்பட்டனர் என்று ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ கூறுமானால், சுதந்திரத்துக்குப் பிந்தைய 43 ஆண்டுகள் வரை (1947 முதல் 1990 வரை) காஷ்மீரில் இருந்து வெளியேறுவதற்கான நிர்ப்பந்தம் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஏன் ஏற்படவில்லை? என்பதற்கு அது பதிலளிக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதில் இல்லை. கடந்த 1990-ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகளும் சீக்கியர்களும் காஷ்மீரி லிருந்து வெளியேறியபோது கூட, மத்தியில் பாஜக ஆதரவுடனான வி.பி. சிங் ஆட்சிதான் நடை பெற்றது. அப்போது, காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் பாஜக தலைவர் ஜக்மோகன்தான். இதுபோன்ற பல உண்மைகள் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் காண்பிக்கப் படாமல் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. ‘காஷ்மீர் பைல்ஸ்’ மூலம் இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே பிரிவினையை கூர்மைப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே படத்தை எடுத்த பாஜக கூட்டத்தினர் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவமானப்படுவது... இது முதன்முறையல்ல..!
பாஜக ஆதரவாளரான விவேக் அக்னிஹோத்ரி இயக்கி, பாஜக-வைச் சேர்ந்த அனுபம் கேர் மிதுன் சக்ர வர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம்தான் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. 2022 மார்ச் 11 அன்று வெளியானது. அப்போதே இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் கொல்லப்பட்டதை யும், அவர்கள் வெளியேற்றப்பட்டதையும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ காட்டுவதாக அதன் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கூறினா லும், இந்தப் படம் ஒரு வரலாற்றுப் புரட்டு; உண்மையை மறைத்து முஸ்லிம்களை கொடூரமானவர்களாக சித்தரிக்கிறது; இந்து - முஸ்லிம்களை துண்டாடுகிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படக்குழு வினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சிறப்பான படம் என்றும், ஆனால் அதனை இழிவுபடுத்தும் சதி நடக்கிறது; எனவே, நாம் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசி, இந்த படத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை அளித்தார்.
அவரின் பாராட்டைத் தொடர்ந்து, பாஜக ஆட்சி நடக்கும் அசாம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்தன. அரசு ஊழியர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு விடுமுறையும் வழங்கின. பாஜக முதல்வர்கள் சிறப்புக்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்தனர். இதனால், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் குறுகிய காலத்திலேயே ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும், சர்வதேச அரங்கில் இந்தத் திரைப்படம் சர்ச்சையில் சிக்கியது. சிங்கப்பூர் இத்திரைப்படத்தைத் திரையிடவே மறுத்து விட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநரின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரையிடப்பட்டாலும் கூட, “திரையிடுவதற்கு தகுதியற்ற இழிவான திரைப்படம்” என்று தேர்வுக்குழு தலைவராலேயே (நாடவ் லேபிட்) கண்டனத்தைப் பெற்றுள்ளது. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை விமர்சித்துள்ள நாடவ் லேபிட் திரைப்படம் குறித்து எதுவும் அறியாதவர் அல்ல. இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 1975-ஆம் ஆண்டில் பிறந்த நாடவ் லேபிட், ‘டெல் அவிவ்’ பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றவர். கட்டாய ராணுவ சேவை முடிந்த பிறகு, சிறிதுகாலம் பாரீஸில் வசித்துவிட்டு, பின்னர் இஸ்ரேலுக்குத் திரும்பி யவர். இங்கு ஜெருசலேமில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிப் பள்ளியில் பட்டம் பெற்ற அவர், “’போலீஸ்மேன்’, ‘தி கிண்டர்கார்டன் டீச்சர்’ படங்களுக்காக கோல்டன் பியர், கான் ஜூரி பரிசுகளை வென்றவர் ஆவார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 1975-ஆம் ஆண்டில் பிறந்த நாடவ் லேபிட், ‘டெல் அவிவ்’ பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றவர். கட்டாய ராணுவ சேவை முடிந்த பிறகு, சிறிதுகாலம் பாரீஸில் வசித்துவிட்டு, பின்னர் இஸ்ரேலுக்குத் திரும்பி யவர். இங்கு ஜெருசலேமில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிப் பள்ளியில் பட்டம் பெற்ற அவர், “’போலீஸ்மேன்’, ‘தி கிண்டர்கார்டன் டீச்சர்’ படங்களுக்காக கோல்டன் பியர், கான் ஜூரி பரிசுகளை வென்றவர் ஆவார்.
கோவா அரசும், ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து நடத்திய இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ‘இந்திய பனோரமா’ பிரிவில் மட்டும் 25 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் இல்லாத படங்கள் ஒளிபரப்பப்பட்டன. தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘ஜெய் பீம்’, பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படங்களும் விழாவில் திரையிடப்பட்டன. திரையிடலின் முடிவில், ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ‘ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. அதேபோல ‘நோ எண்ட்’ பட இயக்குநர் நடேர் சேவர் சிறந்த இயக்குநருக்கான ‘சில்வர் பீக்காக்’ விருதைப் பெற்றார். அதே படத்தில் நடித்த வாகித் மொபாசெரிக்கு சிறந்த நடி கருக்கான விருது அறிவிக்கப்பட்டது. விழா வில், 2022-ஆம் ஆண்டிற்கான ‘இந்தியத் திரைப்பட ஆளுமை விருது’ நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.
இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாடவ் லேபிட் தலைமையில் அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஜிங்கோ கோடோ, ஸ்பானிய ஆவணப்படத் தயாரிப்பாளர் ஜேவியர் அங்குலோ பார்டுரன், பிரெஞ்சு திரைப்பட ஆசிரியர் பாஸ்கேல் சாவான்ஸ், இந்திய திரைப்பட இயக்குநர் சுதிப்தோ சென் ஆகியோர் விரு துக்கான நடுவர்களாக செயல்பட்டனர். விருது தேர்வு குறித்து டுவிட்டரில் பதிவிட்ட தேர்வுக் குழுவின் உறுப்பினர் களில் ஒருவரான சுதிப்தோ சென், “நமது காலத்தின் சிறந்த ஆறு படங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒரு மனதாக விருது வழங்கியது குறித்து பெருமை கொள்கிறோம்” என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், “உலகெங்கும் உள்ள வேறுபட்ட கருப்பொருள்களையும் சிக்கலான பார்வைகளையும் பிரதி நிதித்துவப்படுத்தும் படங்களை நியாய மான வகையில் தேர்வு செய்துள்ளோம்” என்றும் தங்களின் பணியை பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில், 9 நாட்களாக நடைபெற்று வந்த கோவா சர்வதேச திரைப் பட விழா திங்கட்கிழமையுடன் நிறை வடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச் சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்ஐ - IFFI) தேர்வுக் குழு தலைவரு மான நாடவ் லேபிட் பேசினார். அப்போது, கோவா திரைப்பட விழா வில் ‘தங்க மயில்’ விருதுக்காக போட்டி யிட்ட மூன்று இந்திய படங்களில் ஒன்றான, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து, தனக்கு ஏற்பட்ட கடும் அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டார். “’தி காஷ்மீர் பைல்ஸ்’ வெறுப்புணர்வைத் தூண்டும் இழிவான திரைப்படம்” என்றும் “அது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை” என்றும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
“15-ஆவது படமாக திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழி வான திரைப்படம். மதிப்புமிக்க இது போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப்படம் எங்கள் அனைவருக்கும் (தேர்வுக் குழு உறுப்பினர்கள்) அதிர்ச்சி யையும் மன உளைச்சலையும் தருகிறது. இது ஒரு மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப்போட்டி பிரிவுக்குப் பொருத்த மற்ற, அருவருக்கத்தக்க, பிரச்சார திரைப் படமாக எங்களுக்குத் தோன்றியது” என்று கூறிய நாடவ் லேபிட், “கலைக்கும் வாழ்க்கைக்கும் ஓர் இன்றியமையாத விமர்சன விவாதத்தை இந்த மேடை ஏற்றுக் கொள்ளும் என்பதால் உங்களுடன் இந்த கருத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார். இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாடவ் லேபிட்டின் இந்த கருத்து, ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரி கூட்டத்தை கொதிப்படையச் செய்துள்ளது. நாடவ் லேபிட்டிற்கு எதிராக வரிசையாகப் பாயத் துவங்கியுள்ளனர்.
“உண்மை மிகவும் ஆபத்தானது. அதனால் மனிதர்களைப் பொய் சொல்ல வைக்க முடியும்” என்று ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “காஷ்மீர் பண்டி தர்களின் வெளியேற்றம் உண்மையான நிகழ்வாக இருந்தால், நான் வணங்கும் கடவுள், நாடவ் லேபிட்டுக்கு நல்ல புத்தி யை கொடுக்கட்டும்” என்று பாய்ந்துள்ளார். மேலும், “இந்தப் பேச்சின் மூலம் படுகொ லையின் (காஷ்மீர்) துயரங்களை லேபிட் அவமதித்துவிட்டார்” என்றுகொதித்துள்ளார்.
நாடவ் லேபிட்டின் பேச்சு குறித்து இந்திய அரசு நேரடியாக கருத்து எதை யும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் நாடவ் லேபிட் இஸ்ரேலியர் என்பதால், அவருக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் வாயி லாக கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. “இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்ஐ - IFFI) தேர்வுக் குழு தலைவ ராக இருப்பதற்கான இந்திய அழைப்பை யும், அவர்கள் உங்கள் மீது வைத்த நம்பி க்கை, மரியாதை மற்றும் அன்பான விருந் தோம்பலை நீங்கள் மிக மோசமான முறை யில் துஷ்பிரயோகம் செய்து விட்டீர்கள்” என்று நாடவ் லேபிட்டிற்கு, இந்தியாவுக் கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் டுவி ட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவை, இந்திய ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ரீடுவீட் செய்துள்ளார். இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், இத்து டன் நிறுத்தாமல் நாடவ் லேபிட்டைக் கண்டித்து, விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.